தயாசிறி – கம்மன்பிலவுக்கு பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

Aarani Editor
1 Min Read
Dayasiri

சுங்க பரிசோதனையின்றி 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பொய்யானால், குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுக்கும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊடகவியளாலர் சந்திப்பொன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், தயாசிறி ஜெயசேகர மற்றும் உதய கம்மன்பில கூறியது பொய் என்பது தெளிவாகிறது எனவும் வட்டகல சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களின் செயல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறுகிய தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவது எதிர்காலத்தில் ஆபத்தானது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *