தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவித்தல் தொடர்பான சட்டமூலம் தயாரிக்க அமைச்சரவை அனுமதி

Aarani Editor
1 Min Read
Breastfeeding

‘தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவித்தல்’ தொடர்பான சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

தாய்ப்பால் ஊட்டும் குறிகாட்டி தொடர்பில் இலங்கை மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியான குறிக்கோளை முன்நிலைப்படுத்தி பால்மா உற்பத்தித் தொழிற்றுறை மூலம் பிள்ளைகளுக்கு விடுக்கப்படும் ஒழுக்கநெறிக்கு முரணான மற்றும் பாதகமான தாக்கங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்து, பிள்ளைகளின் சுகாதார மற்றும் போசாக்கை பாதுகாப்பதும், விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ள பிரதான தலையீடாக கருதி தாய்ப்பால் ஊட்டுதலை பாதுகாப்பதற்கும், தாய்ப்பால் ஊட்டுதல் தொடர்பான உலக முன்னோடி என்ற ரீதியில் இலங்கை பெற்றுள்ள மரியாதையை தொடர்ச்சியாக பேணுதலை உறுதி செய்வதையும் குறிக்கோளாக கொண்டு தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவிப்பதற்கான சட்டத்தின் மூலம் சட்ட ரீதியான ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்காக 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு தற்போதைய அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *