வேறுபாடுகளின்றி அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் – சுனில் ஹந்துந்நெத்தி

Aarani Editor
1 Min Read
SunilHandunnetti

ஜனாதிபதியின் விருப்பத்தை போல மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேறுபாடுகளின்றி அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பேன் என அமைச்சரும் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவிற்கு புதிதாக தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றுள்ள சுனில் ஹந்துந்நெத்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு குழுக் கூட்டம் இன்று பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யுத்த காலத்தில் கிழக்கு மாகாண மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டி எழுப்ப வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஜனாதிபதியின் இந்த நியமனம் எனக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

கடந்த காலத்தில் நானும் ஆளுநரும் மாவட்டத்தில் தனியாக தேர்தல் கால சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம். இன்று மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருப்பதை நினைத்து பெருமை அடைகிறேன்.

இங்கு சுற்றுலாத்துறை, விவசாயம், மீன்பிடி, என்பனவற்றை கட்டி எழுப்ப வேண்டிய தேவை உள்ளது என அவர் இதன்போது கருத்து தெரிவித்தார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *