முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது பதவிக்காலத்தில் இறக்குமதி செய்த மருந்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்கே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நாட்டிற்குத் தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல முன்னதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
அந்த முறைப்பாடு தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்த பலர் வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.
இந்தநிலையில், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
Link: https://namathulk.com
