ஜனாதிபதி அநுர ஜேர்மனியின் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

Aarani Editor
0 Min Read
SriLankaGermany

ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *