புதிய சிறைச்சாலை ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமனம்

Aarani Editor
0 Min Read
PrisonDepartment

புதிய சிறைச்சாலை ஊடகப் பேச்சாளராக, சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவரை விடுவித்த சம்பவம் தொடர்பில், சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க பதவி விலகியதையடுத்து, ஜகத் வீரசிங்க புதிய சிறைச்சாலை ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாகப் பயன்படுத்திய விவகாரங்கள் தொடர்பில் தற்போது பேசப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து விலகுவதாக, காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *