நாடு திரும்பினார் ஜனாதிபதி

Aarani Editor
1 Min Read
Anura Kumara Dissanayake

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் சென்றிருந்த வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் இன்று காலை 08.58 மணிக்கு டொஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஜேர்மனிய ஜனாதிபதி பிராங்க்-வோல்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் கடந்த 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *