யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை மீண்டும் தினசரி இயங்கும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – காங்கேசன்துறை தற்போது வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சேவையை மீண்டும் தினசரி முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த மாதத்திற்குள் இந்த அதிவேக ரயில் சேவை தினசரி இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
