இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தம்

Aarani Editor
0 Min Read
இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது

தொழிலுக்காக இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிப்புரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில், இஸ்ரேலில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறைவடையும் வரை இலங்கையர்களைத் தொழில்களுக்காக அனுப்ப வேண்டாம் என டெல் அவிஸில் உள்ள இலங்கை தூதரகம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிக்கத்துக்குத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு செல்வதற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *