திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 பேரின் சொத்துக்கள் முடக்கம்

Aarani Editor
0 Min Read
Freezing of assets

திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

அவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஏனையவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம், வீடுகள், வங்கிக் கணக்குகள், வாகனங்கள், நகைகள், வணிக வளாகங்கள் மற்றும் வயல்கள் ஆகியவை முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *