இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து

Aarani Editor
0 Min Read
TrafficCollision

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பஸ்சும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்ததுடன், விபத்துக்குப் பிறகு கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்பதுடன், விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *