கிணற்றில் தவறி வீழ்ந்து 6 வயது சிறுமி பலி

Aarani Editor
0 Min Read
AccidentalDeath

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரப் பகுதியில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த 6 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் சிறுமி கிணற்றினை மூடி அடைக்கப்பட்டிருந்த வலை மீது இருந்து விளையாடிய போது வலை அறுந்து சிறுமி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *