இலங்கைக்கு குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை கடத்த முயன்றதற்காக நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், போதைப்பொருள் வைத்திருந்ததற்காக மூன்று சந்தேக நபர்களையும், அவர்களுக்கு உதவியதற்காக ஒரு சந்தேக நபரையும் கைது செய்தனர்.
ஒரு சந்தேக நபரிடம் 491 கிராம் குஷ் கஞ்சா மற்றும் 312 கிராம் ஹஷிஷ், மற்றொரு சந்தேக நபரிடம் 671 கிராம் குஷ் கஞ்சா மற்றும் 625 கிராம் ஹஷிஷ், மூன்றாவது சந்தேக நபரிடம் 454 கிராம் குஷ் கஞ்சா மற்றும் 825 கிராம் ஹஷிஷ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23, 24, 25 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும், யக்கல, மஹாவத்த, பதுளை மற்றும் கொழும்பு 15 ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் கூறினர்.
சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
link: https://namathulk.com/