இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ஓட்டங்களை எடுத்தார்.
கொல்கத்தா அணி சார்பில் ஹர்சித் ராணா 3 விக்கெட்டுக்களையும், சுனில் நரைன் மற்றும் வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் டி கொக் 2 ஒட்டங்களுடனும், சுனில நரைன் 5 ஒட்டங்களுடனும், ரஹானே 17 ஒட்டங்களுடனும், ரகுவன்ஷி 37 ஒட்டங்களுடனும், ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 15.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
Link: https://namathulk.com/