பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா ஹுமாலா (Ollanta Humala) நிதி மோசடி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பிரேசில் கட்டுமான நிறுவனம் ஒன்றிடமிருந்து ஹுமாலா சட்டவிரோத நியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹுமாலாவுடன் இணைந்து தேசியவாத கட்சியை நிறுவிய அவரது மனைவியும் பண மோசடி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹுமாலாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவரது மனைவிக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர்.
எவ்வாறாயினும் 62 வயதான முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும் எந்த தவறும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.
Link: https://namathulk.com/