பிரச்சார மோதல் : கடும் நிபந்தனைகளுடன் பிணை.

Aarani Editor
1 Min Read
Political Violence

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட 6 சந்தேக நபர்கள் பிணையில் செல்ல சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர் உட்பட ஆறு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் நேற்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்களை தலா 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், குறித்த வழக்கு தவணையை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் அம்பாறை மாவட்டத்தின் முதலாவது தேர்தல் வன்முறை சம்பவமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *