பண்டிகை காலத்தில் இயக்கப்பட்ட பஸ் சேவைகள் தொடர்பில் பல முறைப்பாடுகள்.

Aarani Editor
0 Min Read
Public Transport

புத்தாண்டு காலத்தில் இயக்கப்பட்ட பஸ் சேவைகள் தொடர்பாக பயணிகளிடமிருந்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பஸ் கட்டணங்களை வசூலிக்காதது தொடர்பாக 63 முறைப்பாடுகள் கிடைத்ததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்தார்.

1955 என்ற துரித இலக்கம் மூலம் குறித்த முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், டிக்கெட்டுகள் வழங்கப்படாதது குறித்தும் முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் கூறிய அவர், புது வருடத்திற்கு பின்னர் அந்த முறைப்பாடுகள் விசாரிக்கப்படும் எனவும் கூறினார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *