பொலன்னறுவையில் கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது.

Aarani Editor
1 Min Read
Arrest

மன்னம்பிட்டியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றினருகே நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று மாலை 7 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

மன்னம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பகுதியில் வசிக்கும் 38 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய விசாரணையில், இந்த தேவாலயத்தின் போதகருடனான தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னம்பிட்டி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *