ரயில்வே தண்டவாளத்தில் படுத்துறங்கிய கடவை மேற்பார்வையாளர் பலி.

Aarani Editor
1 Min Read
Accident

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

தியத்தலாவ பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய சம்பத் சல்காடு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பெரகும்புர – அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு இடையிடையே அதிகாலை 4:15 மணியளவில் மோதியதாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ரயில் நிலையத்தில் ரயில் கடவை மேற்பார்வையாளராக பணி புரிந்து வரந்துள்ளார்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் ரயில் செல்லும் போது ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரியவந்துள்ளது .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *