கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
தியத்தலாவ பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய சம்பத் சல்காடு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பெரகும்புர – அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு இடையிடையே அதிகாலை 4:15 மணியளவில் மோதியதாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ரயில் நிலையத்தில் ரயில் கடவை மேற்பார்வையாளராக பணி புரிந்து வரந்துள்ளார்.
பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் ரயில் செல்லும் போது ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரியவந்துள்ளது .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
Link: https://namathulk.com/
