வாக்காளர்களுக்கு மீண்டும் லஞ்சம் வழங்குவதாக ஜனாதிபதி மீது சுமந்திரன் குற்றஞ்சாட்டு.

Aarani Editor
1 Min Read
சுமந்திரன்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய அறிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ X தளத்திலேயே அவர் இதனை கூறினார்.

தேசிய மக்கள் சக்தியால் நிர்வகிக்கப்படும் சபைகளுக்கு நிதி எளிதாக ஒதுக்கப்படும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

இது ஒரு தேர்தல் குற்றமாக என்பதால் இது தவறானது என சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இது மிகவும் தீவிரமானது, ஏனெனில் தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோளின் பேரில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான சரியான நிலைமைகளை உருவாக்குவதை உறுதி செய்வதே ஜனாதிபதியின் செயல்பாடுகளில் ஒன்றாகும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.

இலங்கை தேர்தல் ஆணைக்குழு செயல்படுமா எனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான அரசியல் பேரணியின் போது, ​​தேசிய மக்கள் சக்தியால் நிர்வகிக்கப்படும் சபைகளுக்கு எளிதாக நிதி ஒதுக்குவேன் எனவும், மற்றவர்களுக்கு அல்ல என்றும் ஜனாதிபதி சமீபத்தில் கூறியதை அடுத்து, பல அரசியல் கட்சிகள் கவலைகளை எழுப்பியுள்ளன.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *