இலங்கையின் பொருளாதாரம் – உலக வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல்.

Aarani Editor
1 Min Read
WorldBankReport

மக்கள் தொகையில், சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமை கோட்டின் கீழ், உள்ளதாக இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் தெரிவித்தார்.

உலக வங்கியால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் SRI LANKA DEVELOPMENT UPDATE அறிக்கையை வெளியிட்டு டேவிட் சிஸ்லன் இந்தக் கருத்தை குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீட்சியை அடைந்துள்ளதாகவும் டேவிட் சிஸ்லன் கூறினார்.

முன்னர் கணிக்கப்பட்ட 4.4 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்வதன் மூலம் வளர்ச்சி எதிர்பார்ப்பை விட அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சிக்கு கட்டுமானம் மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைகளின் வலுவான செயல்திறன் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *