தேசபந்துவின் பதவி துஷ்பிரயோகம் : பொலிஸ் விசாரணை குழுவை நியமிக்குமாறு பரிந்துரை

Aarani Editor
1 Min Read
Deshabandu

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக் குழுவொன்றைப் பரிந்துரைக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த விசாரணைக்குழு இரண்டாவது தடவையாக இன்றையதினம் (25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

அத்துடன், இந்தக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர் சட்டமாஅதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்கால விசாரணைச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பது தொடர்பில் இன்றையதினம் கூடிய விசாரணைக்குழு கலந்துரையாடியது.

எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்கு எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கும் இக்குழு முடிவுசெய்தது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *