தபால் மூல வாக்களிப்பு – மூன்றாம் நாள் இன்று

Aarani Editor
1 Min Read
Election

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகின்றது.

கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்கள் இன்றும் (28) நாளையும் (29) தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் குறித்த நான்கு நாட்களில் தங்களது தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 648,495 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,000ஐ கடந்துள்ளது.

கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,053ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை பெறப்பட்ட 3,053 முறைப்பாடுகளில் 2,491 முறைப்பாடுகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *