சிறி தலதா வழிப்பாட்டின் விசேட கண்காட்சியைத் தொடர்ந்து கண்டியில் உள்ள கோஹகோடா குப்பைக் கிடங்கிற்கு 625 டன்களுக்கும் அதிகமான கழிவுகள் கொண்டு வரப்பட்டன.
கண்டி நகராட்சி ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க, குப்பைக் கிடங்கை ஆய்வு செய்தபோது, கொழும்பு நகராட்சி மன்றத்தின் உதவியுடன் கழிவுகளை எரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளைத் தொடர்ந்து 16 ஆண்டுகளின் பின் முதல் முறையாக நடைபெற்ற புனித பல் நினைவுச்சின்ன கண்காட்சியின் போது அதிக அளவில் குப்பைகள் நிறைந்த வீதிகளை சுத்தம் செய்ய ஏராளமான பொது மற்றும் தனியார் குழுக்கள் தன்னார்வத் தொண்டு செய்தன.
இந்த கண்காட்சியை பார்வையிட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டிக்கு வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
