தேசபந்து தென்னக்கோன் தொடர்பான விசாரணைகளுக்கு புதிய பொலிஸ் குழு

Aarani Editor
1 Min Read
Deshabandu Tennakoon

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது .

தேசபந்து தென்னகோன் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக் குழுவொன்றைப் பரிந்துரைக்குமாறு, விடுத்த கோரிக்கைக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபர் குறித்த விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.

இந்த விசாரணைக் குழு நேற்றையதினம் பாராளுமன்றத்தில் மூன்றாவது தடவையாகவும் கூடியபோது நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசாரணைக் குழுவின் ஒத்துழைப்புடன் எதிர்கால விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், நாளைய தினம் மீண்டும் கூடுவதற்கு இந்த விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது .

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *