2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளை உள்ளடக்கிய இரண்டு கட்டங்களாக பொருளாதார கணக்கெடுப்பை நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை அதன் கடைசி பொருளாதார கணக்கெடுப்பை 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடத்தியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் புதுப்பிக்க, விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களாக தனித்தனியாகக் கையாளப்படுவதை உறுதி செய்வதற்காக, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பொருளாதார கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதியால் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பொருளாதார கணக்கெடுப்பை நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்கான பொருளாதார கணக்கெடுப்பு 2025 இல் நடத்தப்படும் எனவும், விவசாயம் அல்லாத நடவடிக்கைகளுக்கான பொருளாதார கணக்கெடுப்பு 2026 இல் நடத்தப்படும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
