முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பான அதிரடி நடவடிக்கைகள் : வாகனங்கள் பறிமுதல்

Aarani Editor
1 Min Read
Former Presidents

முன்னாள் ஜனாதிபதிகள் ஐந்து பேரில் நான்கு பேர் , தங்களிடம் மேலதிகமாக காணப்பட்ட அரச வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தவிர, ஏனைய அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் மேலதிக வாகனங்களை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களில் ஒன்றைத் திருப்பித் தருமாறு ஜனாதிபதியின் செயலாளரின் எழுத்துப்பூர்வ அறிவிப்பின்படி வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ஏப்ரல் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலாளர் கடிதம் அனுப்பியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஜனாதிபதி செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *