தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் அரசியல் கட்சிகளால் திட்டமிடப்பட்டுள்ள ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பின் பல பகுதிகளிலும் தலவாக்கலையிலும் அரசியல் பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இவற்றில் கலந்துக்கொள்ளும் பொதுமக்களின் நலன் கருதி பொலிஸ் தலைமையகத்தால் விசேட அறிவித்தல் வ்சிடுக்கப்பட்டுள்ளது
Link: https://namathulk.com/
