எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் தெரிவித்துள்ளார்.
மன்னார் – உப்புக்குளம் பகுதியில் நேற்று (29) நடைபெற்ற பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஊழல் அரசியலுடன், வன்முறை அரசியலும் இல்லாமலாக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com/
