தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு வருகைத்தந்த பஸ்கள் தொடர்பில் விசாரணை

Aarani Editor
1 Min Read
Bus Investigation

தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக வருகைத்தந்த பஸ்கள் சில அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நெடுஞ்சாலையில் நின்று உணவருந்தியமை தொடர்பிலேயே குறித்த பஸ்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெலிப்பண்ண பகுதிக்கு அருகில் குறித்த பஸ்களின் சாரதிகள் வீதியில் பஸ்ஸை நிறுத்த விட்டு மதிய உணவு இடைவேளை எடுப்பதைக் காட்டும் காணொளியானது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அப்படி நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அதிவேக நெடுஞ்சாலையிலோ அல்லது நெடுஞ்சாலையின் எந்தப் பகுதியிலோ வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *