அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு – கல்வி அமைச்சு.

Aarani Editor
1 Min Read
Ragging

பகிடிவதைகள் தொடர்பான சம்பவங்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அர்ப்பணிப்புள்ள அதிகாரிகளை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன, ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவின் கீழ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடி ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கூறினார்.

இந்த முயற்சியை செயல்படுத்துவது குறித்து கலந்துரையாட, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் வவிசேடக் அமைச்சு, கொழும்புக்கு அழைத்துள்ளது.

இந்தக் கலந்துரையாடல் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறும்.

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தது தொடர்பான விசாரணை குறித்து பிரதி அமைச்சர் செனவிரத்னவும் கருத்து தெரிவித்தார், மேலும் விசாரணை குறித்த கூடுதல் விளக்கங்கள் கூட்டத்தின் போது வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *