ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி கவலை.

Aarani Editor
0 Min Read
ஸ்டார்லிங்க்

இலங்கையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வழங்குநர்களைப் போலல்லாமல், முக்கியமான தரவுகளை அணுக அரசாங்கத்தின் இயலாமையைக் காரணம் காட்டி, ஸ்டார்லிங்குடனான ஆரம்ப ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தேசிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளார்.

இலங்கையில், ஏப்ரலில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ஸ்டார்லிங்க் இணைய சேவையின் முன்னேற்றம் குறித்து நேற்று அரசியல் நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அருகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் சமீபத்திய நீதிமன்ற துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பதில் தொலைத்தொடர்பு தரவுகளுக்கான அணுகல் முக்கிய பங்கு வகித்துள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *