மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் நிறுவனத்திற்குள் ஊழலை ஒழிக்கும் நோக்கில் ஒரு புதிய இலஞ்ச ஒழிப்பு முயற்சியைத் தொடங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையொன்றிலேயே அவர் இதனை கூறினார்.
இதன்போது, இலஞ்சத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வலியுறுத்தும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வாரங்களில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகங்களில் CCTV கேமராக்கள் நிறுவப்படும் என அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இந்த முயற்சி வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் எனவும், நீண்ட காலமாக ஊழல் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Link: https://namathulk.com/
