உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்

Aarani Editor
1 Min Read
Election

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 2 மணி வரையிலான நிலவரப்படி,

கொழும்பு மாவட்டத்தில் 38 சதவீத வாக்குகளும், கம்பஹா மாவட்டத்தில் 36 சதவீத வாக்குகளும், களுத்துறை மாவட்டத்தில் 45 சதவீத வாக்குகளும், அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் 53 சதவீத வாக்குகளும், திகாமடுல்ல மாவட்டத்தில் 48 சதவீத வாக்குகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 45 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 சதவீத வாக்குகளும், பதுளை மாவட்டத்தில் 46 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 54 சதவீத வாக்குகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 50 சதவீத வாக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சதவீத வாக்குகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 42 சதவீத வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில் 46 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், மாத்தளை மாவட்டத்தில் 48 சதவீத வாக்குகளும், கண்டி மாவட்டத்தில் 47 சதவீத வாக்குகளும், காலி மாவட்டத்தில் 45 சதவீத வாக்குகளும், புத்தளம் மாவட்டத்தில் 40 சதவீத வாக்குகளும், திருகோணமலை மாவட்டத்தில் 48 சதவீத வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 49 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *