இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு கல்வி விசாவை வரையறுத்தது பிரித்தானியா.

Aarani Editor
0 Min Read
UKStudentVisa

இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இங்கிலாந்திடம் கோரப்படும் பெறும் கல்வி விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை பிரித்தானியாவின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

படிக்கும்போதே வேலை செய்யும் விசாவில் இங்கிலாந்துக்கு வருபவர்கள் விசா காலாவதியான பிறகு நாட்டை விட்டு வெளியேறாமல் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதால் கல்வி விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை மட்டுப்படுத்த அமைச்சு முடிவு செய்துள்ளது.

புகலிடம் வழங்கப்பட்டால், விண்ணப்பதாரர் வாழ்நாள் முழுவதும் பிரித்தானியாவில் தங்க முடியும் என்பதால், புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *