மின்சார கட்டணம் குறித்த அரசின் நிலைப்பாடு என்ன?

Aarani Editor
1 Min Read
Electricity Tariff

தற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றாலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு மின்சாரக் கட்டணங்களிலிருந்து கிடைக்கும் பங்களிப்பு அதிகமாக உள்ளது என கூறினார்.

இருப்பினும், அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் இந்த விடயத்தில் சரியான கருத்தை தெரிவிக்க முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *