உக்ரைன் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த விளாடிமிர் புடின்.

Aarani Editor
1 Min Read
அழைப்பு

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15 அன்று உக்ரைனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று முன்மொழிந்தார்.

முன்னெடுக்கப்படும் நேரடிப் பேச்சுவார்த்தையில் நீடித்த அமைதியை அடைவதையும், போரின் மூல காரணங்களை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பிப்ரவரி 2022ல் ஜனாதிபதி புடின் ஆயிரக்கணக்கான வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பி விசேட ராணுவ நடவடிக்கை என அறிவித்தார்.

இது 1962ல் கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய மோதலைத் தூண்டியது.

இந்த நிலையில் மோதலின் மூல காரணங்களை நீக்கி, நீண்டகால, நீடித்த அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சியாக, இஸ்தான்புல்லில் உக்ரைனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன்மொழிகிறது என அவர் கூறினார்.

மேலும், 2022 ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டது ரஷ்யா அல்ல. அது கியேவ் தான். ஆயினும்கூடஇ எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல் கியேவ் நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என நாங்கள் முன்மொழிகிறோம் எனவும் புடின் தெரிவித்துள்ளார்.

முடிவெடுக்கவேண்டியது உக்ரேனிய அதிகாரிகள் மற்றும் அவர்களின் கண்காணிப்பாளர்கள் மட்டுமே எனவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மக்களின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவுடன், சனிக்கிழமையன்று நிபந்தனையற்ற 30 நாள் உக்ரைன் போர்நிறுத்தத்திற்கு முக்கிய ஐரோப்பிய சக்திகள் தங்கள் ஆதரவை அளித்ததுடன், ரஷ்யாவிற்கு காலக்கெடுவும் விதித்தன.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *