இளைஞர் ஒருவரை கொரூரமாக தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் இன்றையதினம் (14) நீதிமன்றத்தில் சரணடைந்த ரீச்சர் அம்மா என அழைக்கப்படும் தரம் 5 புலமைப்பரிசில் ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்றையதினம் முற்பகல் அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஹயேஷிகா பெர்னாண்டோவின் கணவர், நிறுவனத்தின் மேலாளர் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு இளைஞர்களை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் மூன்றாவது பிரதிவாதியான ஹயேஷிகா பெர்னாண்டோ உட்பட அனைத்து பிரதிவாதிகளுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே பிணை வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் அனைவரும் தங்கள் கிராம சேவை அலுவலகர் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், கிராம சேவை சான்றிதழ்கள் இன்று கொண்டு வரப்படாததால், அவை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com/
