நுவரெலியாவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறுவதாலும், வார இறுதி விடுமுறையுடன் பௌர்ணமி தின தொடர் விடுமுறை இருந்தமையால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் நுவரெலியா – பதுளை, நுவரெலியா – ஹட்டன், நுவரெலியா – கண்டி போன்ற பிரதான வீதிகளில் இரவு 7 மணி முதல் நல்லிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழிதெரியாமல் பொலிசார் கடுமையான சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்
இந்த போக்குவரத்து நெரிசலால் பிரதான வீதிகளில் சுமார் 5. 6 கி.மீ தூரம் வரையும் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட வரிசையில் தரித்து நிற்பதும் தொடர்ந்து வருகிறது.
அத்துடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நின்ற இடத்தை விட்டு நகராமல் அப்படியே நிற்பதால் சுற்றுலா பயணிகள் பாதிப்படைந்து வருகின்றனர் .
எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வாகன சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Link: https://namathulk.com/
