போர் நிறுத்தத்திற்கு பின்னர் பலப்படுத்தப்படும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பாதுகாப்பு.

Aarani Editor
0 Min Read
IndiaForeignMinister

பாகிஸ்தான் – இந்தியா போர் பதற்றம் குறைந்துள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது பாதுகாப்பில் விசேட குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளதுடன் டெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் அவர் பல்வேறு உலகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடம் கலந்துரையாடி வருகின்றார்.

இவ்வாறானதொரு நிலையில், ஜெய்சங்கருக்கான பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *