விரைவில் மின்சார கட்டணங்கள் உயர்வடையும் – விமல் வீரவன்ச எச்சரிக்கை.

Aarani Editor
1 Min Read
ElectricityTariff

ஏழு மாதங்களில் உப்பின் விலை 400 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒரு பக்கட் உப்பின் விலை 60 ரூபாவாவதற்கு 76 வருடங்கள் சென்றதாகவும், ஏழு மாதங்களில் அது 400 ரூபாவாக உயர்வடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தவொரு அரசாங்கமும் உப்பு, அரிசி போன்றவற்றில் இந்தளவு தரகுப் பணம் சம்பாதித்தது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு இயலாமையையும் மூடி மறைத்துக் கொள்ள கடந்த அரசாங்கங்களை குற்றம் சுமத்துவது வாடிக்கையாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளை தவிர்த்து வீண் விரயத்தை தவிர்த்து ஆட்சி செய்வதாக கூறும் அரசாங்கம் அந்தப் பணத்தைக் கொண்டு உப்பு, அரிசி, தேங்காய் போன்றவற்றின் விலைகளை குறைக்க முடியும் அல்லவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விரைவில் மின்சாரக் கட்டணங்கள் உயர்வடையும் எனவும் அது மக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமன்றி ஒட்டுமொத்த கைத்தொழிற்துறையையும் பாதிக்கும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டில் லாபமீட்டிய இலங்கை மின்சாரசபை ஏழு மாதங்களில் எவ்வாறு நட்டமடைந்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *