பாலஸ்தீனத்திற்கான 77ஆவது அல்-நக்பா நினைவு தின நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

Aarani Editor
0 Min Read
Palestine

பாலஸ்தீனத்திற்கான 77ஆவது அல்-நக்பா நினைவு தின நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

‘நக்பாவை முடிவுக்குக் கொண்டு வருதலும் பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை அடைவதற்கான சர்வதேச நடவடிக்கையும்’ என்ற கருப்பொருளில் கொழும்பு – 7 இல் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சமயத் தலைவர்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் பலஸ்தீன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *