தேசிய மக்கள் சக்தியிலிருந்து பகிரங்கமாக வெளியேறிய உறுப்பினர்

Aarani Editor
0 Min Read
Member Resignation

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சிவில் சமூக செயற்பாட்டாளரும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான தி.ஹிருசன் என்பவரே இவ்வாறு பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் இந்த விடயம் தொடர்பில் நேற்றையதினம் (16) கோப்பாய் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசியத்தின் இருப்பை கருதியும் எமது ஈழத் தமிழ் மக்கள் கடந்து வந்த பாதைகளை எதிர்கால சந்ததிக்கு கடத்த வேண்டும் என்ற எதிர் நோக்குடன் தனது சுய விருப்பில் வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *