உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல்.

Aarani Editor
1 Min Read
Sajith Premadasa

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இடையே இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் நேற்றும் கொழும்பில் வைத்து எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துள்ளனர்.

இந்தநிலையில், இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் போது ஒவ்வொரு கட்சியின் செயலாளர்களும் எதிர்க்கட்சித் தலைவரை தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதன் உறுப்பினர் ஒருவர் கலந்துகொள்வார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *