டாக்காவில் உள்ள இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவர், பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்.
தூதுவரை வரவேற்ற பிரதமர், அவரது புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த முக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.
இலங்கையில் உள்ள பிலிப்பைன்ஸ் சமூகம் தொடர்பான தூதரக விடயங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
இது சம்பந்தமாக, வெளியுறவு அமைச்சு தொடர்புடைய விடயங்கள் குறித்த கலந்துரையாடல்களை தொடரவும், தேவையான ஆதரவை வழங்கவும் இணக்கம் தெரிவித்தது.
Link: https://namathulk.com/
