இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
இந்த விடயத்தில் முந்தைய அரசாங்கங்களுடன் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை எனவும், எனவே தற்போதைய அரசாங்கம் நாட்டிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவில்லை என சொல்வது தவறானது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், நாட்டை நடத்துவதற்கு கடன் வாங்க ஒரு ஆட்சியாளர் தேவையா என கேட்டபோது, இதுவரை எந்த கடன்களும் எடுக்கப்படவில்லை என லக்மாலி ஹேமச்சந்திரா வலியுறுத்துகிறார்.
link: https://namathulk.com/
