தேசபந்து தென்னகோனின் சட்டக் குழு முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை நிராகரித்த விசாரணைக் குழு

Aarani Editor
0 Min Read
Deshabandu Tennakoon

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சட்டக் குழு முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை விசாரணைக் குழு நிராகரித்துள்ளதாக, பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும், 23 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை விசாரணைக் குழு வழங்கியுள்ளது.

அதற்கமைய, மேலதிக விசாரணைக்காக, எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடுவதற்குக் குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், அவரது பதவி துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை அளிப்பதற்கு நியமிக்கப்பட்ட, விசாரணைக் குழுவில் இன்று பிற்பகல் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *