கடவுச்சீட்டு சேவையை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை

Aarani Editor
1 Min Read
கடவுச்சீட்டு சேவையை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை

கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு மொத்தம் 186 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்திர் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முன்னர் தினமும் 1,200 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போதைய நிர்வாகம் 4,000 கடவுச்சீட்டுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதெனவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், துறைக்குள் குறிப்பிடத்தக்க பணியாளர் பற்றாக்குறை காணப்படுகிறது.

இந்நிலையில் புதிய அதிகாரிகள் விரைவில் திணைக்களத்தில் உள்வாங்கப்படுவார்கள்.

குடிவரவுத் துறையின் தலைமை அலுவலகம் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 24 மணி நேரமும் செயற்பட்டு வருகின்றது.

கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களும் தற்போது அதிக எண்ணிக்கையிலான புதிய கடவுச்சீட்டுகளை வழங்கி வருகின்றன” என குறிப்பிட்டார்

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *