மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி அதிகாரச சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி இன்று (20) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட 141 ஊழியர்கள் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்திருந்த போதும் அவர்கள் இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை எனவே அவர்களை நிரந்தராக்குமாறு கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் சுரேஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன் போது அனைத்து தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரமாக்குமாறும், 14 நாள் மருத்துவ விடுமுறை வழங்க வேண்டும், ஏனைய ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை வழங்கு, ஜனாதிபதியே எங்களை நிரந்தரமாக்கு போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Link: https://namathulk.com/
