சிங்கப்பூரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 14,200 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த அதிகரிப்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும், புதிய திரிபுகள் பரவுவதும் காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை LF.7 மற்றும் NB.1.8 எனப்படும் கொரோனா திரிபுகள் அதிகளவில் பரவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளைப் பயன்படுத்துமாறும், விசேட பூஸ்டர் ஊசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
link: https://namathulk.com/
